Benefits of Two Type of Water's:தண்ணீரின் மகிமையை தெரிந்தவர்கள் அதை குடிக்க தவறமாட்டார்கள்!...



View This Image




Water:குளிர்த் தண்ணீர் மற்றும் சுடுத் தண்ணீர் இரண்டுமே உடலுக்கு பல விதங்களில் நன்மைகளைத்  தருகின்றனர்.அவைகளில் முதலில்,குளிர்த் தண்ணீர் (Cold Water) சருமத்தைக் களைப்பில் இருந்து மீட்கச் செய்யும், ரத்த ஓட்டத்தை தூண்டும், குறிப்பாக இது திடத் தன்மை வழங்கும் திறன்களைக் கொண்டது. அதேபோல், சுடுத் தண்ணீர் (Warm Water) முகம் மற்றும் தோலில் உள்ள அழுக்கு, எண்ணெய், கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக, சுடுதண்ணீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் கெட்ட வைரஸ் மற்றும் பூச்சிகளை அழிக்கும் காப்பானாக இருக்கும். 

குளிர்த்தண்ணீர் மற்றும் சுடுத்தண்ணீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் சரும நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதை பற்றி கீழே விரிவாகப் பார்க்கலாம்.

குளிர்த்தண்ணீரின் நன்மைகள்:

உடலின் வெப்பத்தை தணிக்கும்(Regulates Body Temperature):

உடலில்  வெப்பம் அதிகரிக்கும் போது, அதனை சமநிலைப்படுத்த  குளிர்த் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலில் உள்ள உள்வெப்பம் (Internal Heat) அதிகரிக்கும் போது ஏற்படக்கூடிய வியர்வை, தலைவலி, உடல்ச்  சோர்வு, சருமப் பிரச்சனைகள் போன்றவற்றை குளிர்த்தண்ணீர் குறைக்க உதவுகிறது.ரத்த ஓட்டம் சிராவதற்கும் இது முக்கியப் பங்கு வகுக்கிறது.குளிர்ந்த நீரில் குளிப்பது, முகத்தில் தெளிப்பது போன்ற செயல்கள் உடலை வெளிப்புற வெப்பத்தில் இருந்து சமநிலையைக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, வெயிலில் இருந்து வந்ததும் குளிர்த் தண்ணீர் குடிப்பதால் சோர்வு தணிவதுடன் உடலில் இருக்கும் வெப்பமும் தணிந்து விடுகிறது. 

கண்களில் வீக்கம் குறைக்கும் (Reduces Eye Puffiness):

குளிர்ந்த தண்ணீர் கண்களுக்கு அருகில் தேய்த்தல் அல்லது ஈரமான குளிர்ந்த துணியை கண்களுக்கு மேல் வைக்கும்போது, உள்ளிருக்கும் சுரப்பிகள் சுருங்கி, வீக்கம் தளரத் செய்கிறது. இது கண்ணில் உள்ள ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி, கண்ணுக்குத் தேவைப்படும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. கண்கள் சோர்வாகவும் வீக்கம் கொண்டதாகவும் தெரிந்தால், காலை நேரத்தில் சில நிமிடங்கள் குளிர்ந்த தண்ணீரால் கண்களை குளிர வைப்பது சிறந்த பலனை தரும். இது உங்கள் முகத் தோற்றத்தை இளமையாகவும் பொலிவாகவும் காட்ட உதவுகிறது.

மனச்சோர்வை போக்கும்(Reduces Stress and Refreshes Mind):

குளிர்த் தண்ணீர் உடலுக்கும் மனதிற்கும்  வலிமையான சக்தியை  அளிப்பதில் சிறந்தது.அதாவது, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகமாவும் நிகழும் இன்றைய காலத்தில், ஒரு கிளாஸ் கண்ணாடி குளிர்த்தண்ணீர் மிகுந்த நிம்மதியைத் தரக்கூடியது. குளிர்ந்த நீர் குடிப்பதால் உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தப்படுகிறது, அதனால் மனம் தளர்ச்சியின்றி அமைதியாக இயங்கும். மனஅழுத்தம் மற்றும் கவலைக்கான நிகழ்வுகளைக் குறைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.மேலும், குளிர்ந்த நீர் குடிப்பது, உடலை புத்துணர்வாக வைத்திருப்பதோடு, திடீரென மந்தமான மனநிலையை மாற்றி, சுறுசுறுப்பையும் அதிகரிக்க செய்கிறது. சில சமயங்களில், முகத்தில் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கும் போது ஒரு வித சந்தோசம் நமக்குள் ஏற்படும். அதனால் மனச் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் குளிர்ந்த நீரை குடிப்பதும் முகத்திற்கு பயன்படுத்துவதும் நல்ல தீர்வாக இருக்கும்.

முகத்தில் எண்ணெய் கட்டுப்பாடு (Controls Oil Secretion):


முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பது, தோலில் பிம்பிள், பிளாக் ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழி  வகுக்கும். இவ்வாறான எண்ணெய் சுரப்புகளை கட்டுப்படுத்த குளிர்ந்த தண்ணீர் இயற்கையான தீர்வாக செயல்படுகிறது. குளிர்ந்த தண்ணீர் முகத்தில் பயன்படுத்தும்போது, சுரப்பிகளை சுருங்கச் செய்து எண்ணெய் வெளியேறும் வேகத்தை தாமதமாக்குகிறது. குறிப்பாக, ஒயிலி (oily) மோசமான தடுப்புத்தன்மை கொண்ட தோல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தினமும் காலையில் மற்றும் மாலையில் குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவுவதால், முகத்தில் தேவையற்ற எண்ணெய் உற்பத்தி குறைந்து, முகம் சீரான மற்றும் மெல்லிய தோற்றத்தை பெறும். இதன் மூலம் முகம் எப்போதும் சுத்தமாகவும், அதிகமான பிரச்சனைகளின்றியும் காணப்படும்.

தோலை இறுக்கமாக வைத்திருக்க உதவும்(Tightens Skin):


குளிர்ந்த தண்ணீர் தோலில் உள்ள சிறு ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் தோலை திடமாகவும் வலிமையாகவும்  மாற்றுகிறது. குறிப்பாக முகவாய் சுருக்கங்கள் (pores) குளிர்ந்த தண்ணீரால் தாறுமாறாக திறந்துவிடாமல் சுருங்கி, முகம் இறுக்கமாகத் தெரியும். இது தோலின் உள்மட்ட அடுக்குகளுக்கு சக்திவாய்ந்த பயிற்சியாக செயல்படுகிறது.தொடர்ந்து குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவுவதன் மூலம் தோல் மென்மையாகி, வயதான தோற்றத்தைத் தடுக்கிறது. இயற்கையாக தோலை உறுக்கி, பளபளப்புடன் வைத்திருக்க வேண்டுமெனில், குளிர்ந்த தண்ணீர் நல்ல தீர்வாக இருக்கும்.

சூடானத் தண்ணீரில் கிடைக்கும் நன்மைகள்:


உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் (Detoxifying the Body):


சூடான தண்ணீர் உடலின் உள் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சிறுநீரகம், குடல் மற்றும் தோல் வழியாக நச்சுப் பொருட்களை வெளியேற்றச் செய்கிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் காலையில் சூடான தண்ணீர் குடிப்பது, ஜீரண சுரப்பிகளை தூண்டி, பாக்டீரியாக்கள், கழிவுகள் போன்ற பிரச்சனைகள் எல்லாம் மெதுவாக வெளியேற்ற உதவுகிறது. இது வாயிலாக உடல் எடை கட்டுப்பாடு, தோல் சீரமைப்பு மற்றும் சோர்வின்மை போன்ற பல நன்மைகளும் கிடைக்கின்றன.ஆகவே, நம்முடைய உடல்நலத்தைக் காப்பதற்கும், உடலை உள்ளிருந்து தூய்மையாக்கவும் சூடான தண்ணீர் சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்(Increases Blood Flow):


சூடான தண்ணீர் பருகுவது உடலுக்குள் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவி செய்கிறது. இது நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள தடைபட்ட பகுதியில் வெப்பத்தை வழங்கி, நரம்புகளின் சுருக்கத்தை தளர்த்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துகள் சரியாக சென்று, உடல் ஆரோக்கியமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.மேலும்,தினமும் சூடான தண்ணீர் பருகும் பழக்கம், குறிப்பாக காலை நேரத்தில் பருகுவது , உடல் மற்றும் மனம் இரண்டையும் புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். 

தோல் ஆரோக்கியத்திற்கு உதவும்(Skin Helps in Health):


சூடான தண்ணீர் உடலின் உள்ளமைப்புகளை சுத்தமாக்கி, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால்  தோலில் உள்ள சுரப்பிகளைச் சுத்தம் செய்து, பிம்பிள்கள், கரும்புள்ளிகள், எண்ணெய் சுரப்புகள் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. முன்பு சொன்னது போல்  இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், தோலுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக சென்று, தோலை பளிச்சென்று காண செய்யும். சூடான தண்ணீர் பருகும் பழக்கம், தோல் வறட்சி, சுருக்கங்கள் மற்றும் முரடான தோலை தடுக்கும் சக்தியை கொண்டது. எனவே, அழகு நலனுக்காக வெளியிலிருந்து பராமரிப்பதை மட்டுமின்றி, உட்புறத்திலிருந்தும் பராமரிக்க சூடுத்தண்ணீர் மிகவும் அவசியம்.

தேவையற்றக் கொழுப்பை கரைக்கும்(Melting Unnecessary Fat):


காலையில் வெறும் வயிற்றில் ஒரு கோப்பை சூடுத்தண்ணீர் பருகுவது, உடலின் மெட்டாபாலிசத்தின் செயல்பாட்டை தூண்டி, எரியும் கலோரி அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகளை மெதுவாக கரைக்கவும் செய்யும். மேலும், சூடுத்தண்ணீர் குடிப்பதால் பசியை கட்டுப்படுத்தும் சக்தியும் உருவாகிறது, அதனால் அதிகமாக உணவு உட்கொள்வது குறைக்கப்படுகிறது. தண்ணீரின் வெப்பம் குடல்வாயில் சுழற்சி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. தொடர்ந்து இந்த வழிமுறையை பின்பற்றும் போது, உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வந்தும், உடலமைப்பு ஒழுங்காகவும் காணப்படும். எனவே, உடல் பருமனை இயற்கையாகக் குறைக்க விரும்புபவர்கள், தினசரி சூடுத்தண்ணீர் பருகும் பழக்கத்தை கொண்டு வருவது  மிகவும் பயனளிக்கும்.

மன அழுத்ததை  குறைக்கும்(Reduces Mental Stress):


சூடான தண்ணீர் உடலுக்குள் சென்றவுடன், நரம்புகளை தளர்த்தி, மனதில் ஏற்படும் கவலைகளை மறந்து மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். குறிப்பாக, இது மூளையில் உள்ள அழுத்தம் உணரும் ஹார்மோன்கள் அதாவது  கார்டிசோல் அளவை குறைத்து, மனச்சோர்வையும் பதற்றத்தையும் நீக்கும்.  பசுமை சூழலில் அல்லது அமைதியான நேரத்தில் சூடுத்தண்ணீர் பருகும் போது, மனம் தெளிவாகவும் சாந்தமாகவும் மாறுகிறது. மேலும், இது தூக்கத்தை மேம்படுத்தும், வெப்பத்தை உருவாக்கி உடலை அமைதிப்படுத்தும் பணியையும் செய்கிறது. தினமும் ஒரு சில முறை சூடுத்தண்ணீர் பருகும் பழக்கம், மன நிம்மதி, தெளிவு மற்றும் மனதின் சமநிலையை உருவாக்குகிறது. 

வாயு பிரச்சனையை குறைக்கும்(Reduces Gas Problems):


சூடான தண்ணீர் செரிமானக் கோளாறுகளை சரிசெய்து, வயிற்றில் ஏற்படும் அதிகமான வாயுவை வெளியேற்ற உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சூடுத்தண்ணீர் குடிப்பது குடலின் செயல்பாட்டை தூண்டி, சதை உணவுகளால் உருவாகும் வாயுவை கரைத்து வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக, இது குடல்வாய் சுழற்சியை தூண்டி, செரிமானத்தை விரைவாக்கி, வயிற்றுப் பொக்கை மற்றும் உமிழ்நீர் சுரப்புகளை சமநிலைப்படுத்துகிறது. தொடர்ச்சியாக சூடுத்தண்ணீர் பருகும் பழக்கம், வயிற்று வலி, உள்வாயு ஏற்படுவது மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வழி வகுக்கும். எனவே, சூடுத்தண்ணீர் பருகுவது, வயிறு நிம்மதியுடன் இருக்கவும், நாள்பட்ட உடல்சுற்றுவட்ட செயல்பாடுகளைச் சீராக வைத்திருக்கவும் பெரும் பங்கு வகிக்கிறது.

மூட்டுவலி மற்றும் தசை வலிகளை குறைக்கும்(Reduces joint pain and muscle pain):


சூடுத்தண்ணீர் உடலுக்குள் சென்றவுடன்,உடலை உள்ளிருந்து வெப்பப்படுத்தி, நரம்புகள் மற்றும் தசைகளின் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும் கட்டுப்பட்ட பகுதிகளில் நிவாரணம் அளிக்கிறது. குறிப்பாக குளிர் காலங்களில் அல்லது அதிக வேலைப்பளுவால் ஏற்படும் தசை இறுக்கங்களை குறைக்கும் வகையில் சூடுத்தண்ணீர் மிகச் சிறந்ததாக செயல்படுகிறது. தினசரி காலையில் அல்லது இரவில் சூடுத்தண்ணீர் பருகுவதன் மூலம் மூட்டுகளில் உள்ள வலிமை குறைபாடுகள் மற்றும் வலி உணர்வுகள் மெதுவாக குறையும். இது உடல் முழுவதும் நிம்மதியான உணர்வை அளிக்கிறது. எனவே, மூட்டு மற்றும் தசை வலிகளை இயற்கையாகக் குறைக்க விரும்புவோர், சூடுத்தண்ணீரை அன்றாட வாழ்கையில் சேர்த்துக் கொள்ளவது சிறந்தது.

கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்:


  1. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு கோப்பை சூடான (மிதமான சூட்டில் குடிப்பது) தண்ணீர் பருகவும்.
  2. அதிக சூட்டில் குடிக்க வேண்டாம் . வாயு புண் ஏற்படலாம்.
  3. சுடுதண்ணீருடன் வெந்தயம், இஞ்சி, எலுமிச்சை சாறு அல்லது சிறிது தேன் சேர்த்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
  4. மிகுந்த குளிரில் உடல் அல்லது தலைக்கு நேரடியாக குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். ஜுரம் அல்லது மூட்டு வலி ஏற்படலாம்.கவனத்தோடு செயல்படவும்.
  5. குளிர்ந்த தண்ணீர் அதிகமாக குடிக்கும் வழக்கம் வேண்டாம். அளவோடு குடிக்கவும். 
  6. காலை நேரங்களில் முகம் மற்றும் கண்களுக்கு மட்டும் குளிர்ந்த நீர்  பயன்படுத்துவது சிறந்தது.
  7. எந்தவொரு ஆரோக்கிய வழிமுறையையும் தொடரும் முன் உங்கள் உடல்நிலைப்படி மருத்துவ அறிவுரை பெறுவது சிறந்தது.


மேலும் வாசிக்க: BH Boss Tamil(Beauty and Health Care Tips in Tamil))