Posts

Showing posts from February, 2026

Blackheads Removal Pack:மூக்கு பகுதியில் கரும்புள்ளிகளால் அவதிப்படுகிறீர்களா? இந்த ஒரு பேக்கை மட்டும் பயன்படுத்திப் பாருங்க. கரும்புள்ளி போய் விடும்

Image
Blackheads Removal Home Remedies : முகத்தின் அழகை வெளிப்படுத்துவதில் மூக்கிற்கு அதிகப் பங்கு  உண்டு. மூக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் மூக்கின் அழகை கெடுப்பது மட்டும்மில்லாமல் முகத்தின் அழகையும் சேர்த்து கெடுக்கும். நிறைய பேர்களுக்கு மூக்கில் கரும்புள்ளிகள் இருப்பதுண்டு.மூக்கில் அதிகமாகத் தோன்றும் கரும்புள்ளிகள் கோமெடோ (Comedo) வகையாகும். இவை முகத்தின் அழகை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் சுத்தமாக இல்லாதது போல தோற்றமளிக்கும்.இதனை சரி செய்வது மிகவும் சுலபம்.வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து பேக் தயாரித்து  கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடலாம்.  கரும்புள்ளிகள் உருவாகும் விதம்: நம் முகச்சருமத்தில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) எண்ணெய் (Sebum) சுரக்கின்றன.அந்த எண்ணெய், இறந்த செல்கள், தூசி மற்றும் அழுக்கு சேர்ந்து சருமத் துளைகள் (pores) அடைபடுகிறது.இவ்வாறு அடைந்த துளைகள் காற்றில் வெளிப்படும்போது ஆக்ஸிடேஷன் (oxidation) ஏற்பட்டு கருப்பு நிறமாக( Blackheads ) மாறுகிறது.அதை தான் கரும்புள்ளிகள் என்று நாம் கூறுகிறோம். அதிகமாக மூக்கில் தோன்றக் காரணங்கள்: மூக்கு...

Benefits of Mango and Mango Recipe: உங்ககிட்ட மாம்பழம் இருக்கா???மாம்பழத்தை வச்சி இப்படி செய்து பாருங்க...சும்மா அட்டகாசமா இருக்கும்!...

Image
Mango :உலகிலேயே மிகவும் சுவையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும்.  இது வெப்பமண்டல நாடுகளில் பரவலாக விளைகிறது.இது இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, பி6 மற்றும் நார்ச்சத்து (dietary fiber) நிறைவாகக் காணப்படுவதால்  உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.இவை உடலுக்கு தேவைப்படும் தாகநீரையும், சக்தியையும் தருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இப்பழம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனநலத்துக்கும் துணை புரிகின்றது. மாம்பழத்தின் வகைகள்: மாம்பழம் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றது. இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட வகைகள்  உள்ளன. அதில் சிறந்த பழங்கள் பின்வருமாறு: • அல்போன்சோ (Alphonso) • பங்கனப்பள்ளி (Banganapalli) • நீலம் (Neelum) • மல்லிகா (Mallika) • லங்க்ரா (Langra) • சிந்தூரி (Chausa/Sindhuri) • தசரி (Dasheri) • கேசர் (Kesar) • இமாம் பாஷா (Imam Pasand) • தோடாப்புரி (Totapuri) அல்பொன்சோ ஏற்றுமதிக்கு மிக உயர்ந்...

Sunlight in the morning benefits:அதிகாலை வேளை சீக்கிரமாக எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...

Image
  Benefits of Sunlight :ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் இணைந்ததில்தான் அழகான வாழ்க்கை உள்ளது. மனித உடல் இயற்கையின் சுழற்சியை ( circadian rhythm ) பின்பற்றும்போது தான் முழுமையாக செயல்படும். அதில் மிகவும் முக்கியமானது அதிகாலை எழும் பழக்கம்.  அதிகாலை நேரத்தில் எழும் போது, நம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு விதமான சந்தோசத்தை தருகிறது.மேலும், உடலை சுறுசுறுப்பாகவும், மனதை தெளிவாகவும், வாழ்க்கையை மேலும் நல்வழியில் நடத்தவும்  வைக்கும். இந்த பழக்கம் நமக்கு உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல செரிமானம், தூக்கம், மன உற்சாகம் போன்ற எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. அதிகாலை எழுவதால் உடலினுள் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மன அமைதி கிடைக்கும் மற்றும் மன அழுத்தம் குறையும்: அதிகாலை சீக்கிரமாக எழுவது மன அமைதியை பெருக்கி, மன அழுத்தத்தை கணிசமாக குறைக்கும். அதிகாலை நேரம் இயற்கையிலேயே அமைதியானது. அந்த நேரத்தில் பறவைகளின் குரல், மெல்லிய காற்று, அதிகாலையில் எழுந்த சூரியனின் ஒலிக் கதிர்கள் மனதை அமைதிக்குக் கொண்டு செல்கின்றன.மேலும், மனதிற்கு ஓய்வையும், நிலைத்த தன்னம்பிக்கையையும...

Papaya Fruit: பப்பாளிப்பழத்தை பற்றிய சில முக்கியமான தகவல்கள் இதோ!...

Image
  பப்பாளி பழம்(Papaya Fruit) Benefits of Papaya :பப்பாளி பழம் சுவையான  ஆரோக்கியம் நிறைந்த  மற்றும் ஊட்டச்சத்து உடைய  பழமாகும். இது பொதுவாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்து, இனிப்பும் மென்மையும் நிறைந்த சுவையுடன் இருக்கும். பப்பாளி பழத்தில் வைட்டமின்சி, ஏ, இ மற்றும் பி காம்ப்ளெக்ஸ், பீட்டா-கரோட்டின், பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து மிகுந்த அளவில் காணப்படுகிறது. இதனுள் உள்ள பபெயின் (Papain) என்ற என்சைம் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவி புரியும். பப்பாளி பழம், தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். முகத்திலுள்ள கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை குறைக்க இதன் பேஸ்டு பயன்படுகிறது.  தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இது மிகவும் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் உணவாகும். எனவே, பப்பாளி பழம் இயற்கையான மருந்து என கூறுவது மிகையாகாது. உடலுக்கு இயற்கையான அழகையும், ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும் பப்பாளிப்பழத்தை பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை கட்டுப்படுத்த ...

அதிக நேரம் தொலைபேசி,தொலைக்காட்சி மற்றும் மடிக்கணினியில் செலவிடுகிறீர்களா??? உங்களுக்கான பதிவுதான் இது!...

Image
  Eye Care : இன்றைய டிஜிட்டல் உலகத்தில், அதிகமானோர் முழு  நேரமும்  டிவி, கணினி மற்றும் தொலைபேசி திரைகளின் அதிக நேரம் செலவிடுகின்றனர்.டிவி முன் நீண்ட நேரம் இருப்பது கண்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால்  கண் வலி, உலர்ச்சி, மங்கலான பார்வை மற்றும் தலைவலி  போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். இதனை தவிர்க்க, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறையாவது 30 அடி தொலைவில் உள்ள பொருளை 15 வினாடிகள் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாகும். அதிக நேரம் டிவி/கணினி மற்றும் தொலைபேசி  பார்க்கும் போது சற்று  இடைவெளி எடுத்துக்கொண்டு  கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருந்தால் கண்களில் உலர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இதனை தவிர்க்க டாக்டர் பரிந்துரைக்கும் மூக்கு  கண்ணாடியை பயன்படுத்தலாம். மேலும், தினசரி கண் பயிற்சிகள் மற்றும் முழுமையான தூக்கத்தைப் பெற்றுக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சரியான உணவுமுறை, வைட்டமின் A மற்றும் C, ஓமெகா-3 கொழுப்புத்தன்மை நிறைந்த உணவுகள், கண் நலத்திற்கு மிகவும் நல்லது. இப்படி ஒழுங்கான பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி, நீண்ட நேரம் ட...

துரித உணவுகளை தவிர்த்துவிட்டு இயற்கை உணவுகளை சாப்பிட்டு பார்க்கலாமே!...அழகும், ஆரோக்கியமும் கைக்கெட்டி நிற்கும்...

Image
  Natural care :சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன், காரம், புளி. உப்பு போன்ற ருசியுள்ள உணவுகளை அதிகம் ருசிப்பதனால், அவனுடைய தனிமனித நடத்தையில் கோபம், அகங்காரம், பொறாமை போன்ற குணாதிசயங்களுடன் வாழ முற்படுகிறான் இதனால் நாட்டில் குற்றங்கள், வன்முறை, கொலை, களவு போன்றவை பெருகிச் சமூகச் சீரழிவும் ஏற்படுகிறது. ஆனால், இயற்கை உணவுகளை உட்கொள்ளும் மனிதன் இயல்பாக - இயற்கையாகச் சிந்திக்கிறான். காரம், புளி, உப்பு இல்லாத இயற்கை உணவுகள் ஒருவனுக்குத் தீர்க்கமான சிந்தனையைத் தருவதால், அவனுடைய செயல்பாடுகளில் ஒரு தெளிவு, அமைதியான வாழ்வியல் முறை இவை அனைத்தும் ஏற்பட்டு விடுகிறது.இதனால் சமூக அமைப்பில் குற்றங்கள், வன்முறை குறைந்து, நல்லதொரு சமூக அமைப்பு ஏற்படுகிறது.  அது சரி!...இயற்கை உணவுக்கு மாறுவது எப்படி...? முதலில் இந்த சித்தர் பாடலைக் கவனியுங்கள். 'காலை இஞ்சி கடும்பகல் சுக்கு  மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண  கோலையூன்றிய கிழவனும்  காலால் குலுக்கி நடப்பானே!' -இது சித்தர் பாடல்  48 ரூபாயில் உன்னத அழகு பெரும் ரகசியம் இந்தப் பாடலில் தான் இருக்கிறது. ஒரு நாள் செலவு ரூபாய் ஒன்று மட்டும...